யாழில். மோட்டார் சைக்கிள்களை ஏற்றி சென்ற கனரக வாகனமொன்று விபத்து..!!!


மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனமொன்று சிறுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள காணிக்குள் பாய்ந்தது.

யாழ் நகரிலிருந்து பருத்தித்துறைக்கு மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமே விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த விபத்தின் போது குறித்த வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளான போதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டதா அல்லது சாரதியின் நித்திரை தூக்கத்தால் ஏற்பட்டதா என்ற கோணத்தில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here