கிளிநொச்சி - கல்மடு நகர் பகுதியில் நேற்று(06.01.2026) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன் பாம்பு கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்..
பாம்பு கடிக்கு இலக்காகன இளைஞன் தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற பொழுது இளைஞன் ஏற்கனவே இறந்துள்ளமையை வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனை அடுத்து இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே பரிதாபகரமாக உயிரழந்தவராவார்.
Tags:
sri lanka news