இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு.!!!


இலங்கையில் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.

பெற்றோல் 92 ஒக்டேன்: ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 410.00 ரூபா ஆகும்.

பெற்றோல் 95 ஒக்டேன் (யூரோ 4): ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 470.00 ரூபா ஆகும்.

ஓட்டோ டீசல்: ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 392.00 ரூபா ஆகும்.

சூப்பர் டீசல் (4 ஸ்டார்): ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 458.00 ரூபா ஆகும்.


மண்ணெண்ணெய்: ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 265.00 ரூபா ஆகும்.





Previous Post Next Post


Put your ad code here