விரிவுரையாளர் கொலை வழக்கு - மன்றில் சாட்சியம் அளித்த மகன்..!!!



யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் கழுத்து நெரித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , விரிவுரையாளரின் மகன் மற்றும் பொலிஸார் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 3ஆம் திகதிக்கு திகதியிட்ட மன்று , விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகனை அன்றைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் மன்று உத்தரவிட்டது.
Previous Post Next Post


Put your ad code here