யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையின் போது இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 52பேரில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 8 பேர்
பொது வைத்தியசாலை மன்னார் - ஒருவர்
தனிமைப்படுத்தல் மையம் முல்லைத்தீவு - 52 பேர் .