யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள் இதோ..!!!


மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். அல்லைப்பிட்டி, மண்டைதீவு, மண்டைதீவு கடற்படை முகாம், மண்கும்பான், மண்கும்பான் விடுதி, மண்கும்பான் கடற்படை முகாம், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, வெண்புரவி நகர், பூம்புகார், பருத்தித்துறை VM வீதி 1 ஆவது சந்தி, பருத்தித்துறை கல்லூரி வீதி, சாளம்பை, தம்பசிட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here