கோண்டாவிலில் இனந்தெரியாத கும்பலால் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு..!!!


யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு ஞான வைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று(06) இரவு இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here