முல்லைத்தீவில் இடம்பெறும் சட்டத்துக்கு புறம்பான மரங்களைத் தறித்து ஏற்றிச் செல்லும் நடவடிக்கை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மரக்கடத்தல் கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் முல்லைத்தீவு முறிப்புப் பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றதுள்ளது.
சம்பவத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன், கே.குமணன் ஆகிய இருவர் மீதே மரக் கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.