யாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை..!!!


மின்சாரத்தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை (23.05.2021) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை யாழ். நல்லூர்க் கந்தசுவாமி கோவில், கைலாசப் பிள்ளையார் கோவில், அரசடி பழம் வீதிச் சந்தி, நாவலர் வீதி- இராசாவின்தோட்டம், பருத்தித்துறை வீதி, றக்கா வீதி, சுண்டிக்குளி, இராமநாதன் வீதி புகையிரதக் குறுக்குச் சந்தி, றக்கா வீதி, பிரிட்டிஷ் கவுன்சில், இயற்கை விஞ்ஞான பீடம், விஞ்ஞான பீடம், தியாகி அறக்கொடை நிலையம், றியோ ஐஸ் கிறீம் ஆகிய பகுதிகளிலும்,

நாளை காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். சாவகச்சேரி நகரம், சாவகச்சேரி பிரதேச செயலகம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி நீதிமன்ற வளாகம், அரசடி, மருதடி, ஆசிரியர் வீதிச் சந்தி, டச்சு வீதி, சுண்டுவில், கச்சாய் வீதி, கல்வயல் துர்க்கை அம்மன் கோவில் பிரதேசம் , சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில், நுணாவில், நுணாவில் வைரவர் கோவில் பிரதேசம், சாவகச்சேரி பெருங்குளம் சந்தி, சாவகச்சேரி தபால் அலுவலகம் சந்தி, புகையிரதநிலைய வீதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here