யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து வரும் நிலையில் கடந்த 9 நாட்களில் 423 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட கொவிட்-19 புள்ளிவிபர அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்பயைடில், ஜூலை 01 முதல் 09 வரையான நாட்களில் மட்டும் இவ்வாறு 423 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூலை - 01 - 36 பேர்
ஜூலை - 02 - 41 பேர்
ஜூலை - 03 - 63 பேர்
ஜூலை - 04 - 71 பேர்
ஜூலை - 05 - 25 பேர்
ஜூலை - 06 - 64 பேர்
ஜூலை - 07 - 50 பேர்
ஜூலை - 08 - 25 பேர்
ஜூலை - 09 - 48 பேர்
இவ்வாறு இந்த மாதத்தின் முதல் 9 நாட்களில் மேலும் 423 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஜூலை 09 வரையான நாட்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 5,749 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் ஜூலை 01 முதல் 09 வரையான நாட்களில் மட்டும் இவ்வாறு 12 கொவிட்-19 மரணங்கள் யாழ். மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.
ஜூலை - 01 - 4 மரணங்கள்
ஜூலை - 02 - 2 மரணங்கள்
ஜூலை - 04 - ஒரு மரணம்
ஜூலை - 05 - ஒரு மரணம்
ஜூலை - 06 - 3 மரணங்கள்
ஜூலை - 07 - ஒரு மரணம்
இதையடுத்து யாழ். மாவட்டத்தில் ஜூலை-09 வரையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டத்தில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம்,
மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் - 33 பேர்
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 12 பேர்
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் - 12 பேர்
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் - 05 பேர்
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்
வேலணை பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் - 02 பேர்
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - ஒருவர்