நாடு முடக்கப்படாமைக்கு இதுவே காரணம் - சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்..!!!




தடுப்பூசி பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்படுதல் ஆகியவற்றின் ஊடாகவே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியுமென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவலுக்கு மத்தியில் நாட்டை முடக்குவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் வலுவான நாடுகள் கூட, கொரோனா பரவல் ஆரம்பமான காலப்பகுதியில் நாட்டை முடக்கிய போதிலும், பின்னர் நாட்டை திறந்து கொரோனா தொற்றை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here