வவுனியாவில் மேலும் 84 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் சில நேற்று வெளியாகின.
அதில் நெளுக்குளம் பகுதியில் இருவருக்கும், சிறிநகர் பகுதியில் நான்கு பேருக்கும், அண்ணாநகர் பகுதியில் ஒருவருக்கும், அவுசலப்பிட்டிய பகுதியில் இருவருக்கும், தவசிகுளம் பகுதியில் நான்கு பேருக்கும், சின்னச்சிப்பிகுளம் பகுதியில் இருவருக்கும், நேரியகுளம் பகுதியில் இருவருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் இருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் கர்ப்பவதிப் பெண் ஒருவருக்கும், அரசடிக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், இராசேந்திரங்குளம் பகுதியில் இருவருக்கும், தம்பனைபுளியங்குளம் பகுதியில் ஏழு பேருக்கும், கல்மடு பகுதியில் ஏழு பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஓமேக்கா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும், கல்குண்ணாமடு பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், சாந்தசோலை பகுதியில் மூன்று பேருக்கும், சிறைச்சாலை கைதிகள் ஐந்து பேருக்கும், சுகாதார திணைக்கள விடுதியில் மூன்று பேருக்கும், வவுனியா இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருககும், நெடுங்கேணி பகுதியில் ஆறு பேருக்கும், நெல்வேலிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் ஒருவருக்கும், செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 13 பேருக்கும், போகவ்வேவ பகுதியில் ஒருவருக்கும், தாலிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், வைரவபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேற்படி தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களைச் சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tags:
sri lanka news