சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வடக்கு ரயில் பாதையின் நீண்ட தூர ரயில்கள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன்படி வடக்கு ரயில் பாதையில் இன்றும் நாளையும் ஆறு நீண்ட தூர ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு கடுகதி ரயில் பயணங்களும், கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு யாழ்தேவி ரயில் பயணங்களும், கொழும்பு, கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு நகர்சேர் கடுகதி ரயில்களும் இயக்கப்பட உள்ளன.