Monday 20 March 2023

2.9 பில்லியன் டொலர் கடனுக்கான IMF அங்கீகாரம் கிடைத்தது..!!!

SHARE

இலங்கைக்கு இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்தேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

வொசிங்டனில் இன்று கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இது குறித்து நாளை (21) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதேவேளை இந்த விடயம் சம்பந்தமாக விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் வெளியிட உள்ளார்.

நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இந்த தகவலை வழங்கியுள்ளார்.
SHARE