யாழில் விபத்து - பெண் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்தியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - டிப்பர் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சமுர்த்தி வங்கியின் முகாமையாளரான கோப்பாய் தெற்கைச் சேர்ந்த கௌரிமலர் (வயது 52) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here