Thursday 28 March 2024

புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..!!!

SHARE

நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். இவர் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவர் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்டும்.

அந்த வகையில் புத்திகாரகன் புதன் மார்ச் 26 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைந்தார். மேலும் ஏப்ரல் 02 ஆம் தேதி இவர் மேஷ ராசியில் வக்ரமாகவுள்ளார். அதோடு இந்த மேஷ ராசியில் ஏப்ரல் 09 ஆம் தேதி வரை இருப்பார். இப்படி மேஷ ராசியில் புதன் பயணிக்கும் போது, அவரால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகத்தால் ஒருவருக்கு இருமடங்கு நற்பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். இப்போது புதனால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகத்தால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.


மகரம்

மகர ராசியின் 4 ஆவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். குறைவான மன அழுத்தத்தை உணர்வீர்கள். வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மொத்தத்தில் இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.


ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். வணிகத்திற்காக எதிர்பார்த்த கடன் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சமூகத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.


கன்னி

கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். தொழிலில் ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். தன்னம்பிக்கையும், தலைமைப்பண்பும் அதிகரிக்கும். வேலையை மாற்ற முடிவெடுத்து முயற்சித்தால், இக்காலத்தில் நல்ல பலன்களைப் பெறலாம்.

குடும்பத்தினருடன் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆனால் பணம் தொடர்பான முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அதேப்போல் முதலீடுகளையும் தவிர்க்க வேண்டும்.
SHARE