வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட இருவர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு..!!!


யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட இருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பருத்தித்துறை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியினர் பருத்தித்துறை பொலிஸாரினால் இன்று மாலை கைது செய்யப்பட்டனர்.

தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை நெல்லியடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
Previous Post Next Post


Put your ad code here