Tuesday, 18 March 2025

ஐரோப்பா சென்று இடைநடுவில் திரும்பிய யாழ் இளைஞன் வைத்தியசாலையில் ; மக்களே அவதானம..!!!

ஐரோப்பா சென்று இடைநடுவில் திரும்பிய யாழ் இளைஞன் வைத்தியசாலையில் ; மக்களே அவதானம..!!!


யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட 23 வயதான இளைஞர் ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

 ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த இளைஞன் ஐரோப்பாவிற்குச் செல்வதாக முகவர்களினால் கடந்த வருடம் 2024 மார்கழி மாதம் 28ஆம் திகதி விமானத்தில் கொழும்பு, மும்பை, நைரோபி வழியாக சியாரா லியோன் என்ற மத்திய ஆபிரிக்க நாட்டில் இறக்கிவிடப்பட்ட நிலையில் அவரது பயணம் தடைப்பட்டு சுகவீனமுற்று இருந்தமையால் குடும்பத்தவர்களால் மீளவும் இலங்கைக்கு கடந்த 11ஆம் திகதி அழைக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரினைப் பாதித்த மலேரியாக் கிருமி பிளாஸ்மோடியம் ஃபல்சிபோறம் என்பதாகும்.

இலங்கையில் மலேரியா நோய் முற்றாக அழிக்கப்பட்டமையினால் மீண்டும் நுளம்பின் மூலம் தொற்றும் மலேரியா நோய் பரவாது
இருப்பதற்கு இவ்வாறு வெளிநாடு சென்று மீள்பவர்கள் விமான நிலையத்திலுள்ள வைத்திய அதிகாரியிடமோ அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ வைத்தியசாலையிலோ அணுகி உரிய மருத்துவ ஆலோசனையும் தடுப்பு மருந்தும் பெறலும் அத்தியாவசியமாகும் என போதானாவின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனாநந்தா அறிவித்துள்ளார்.
பால்மா விலை அதிகரிப்பு..!!!

பால்மா விலை அதிகரிப்பு..!!!



எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவுப் பொருட்களின் விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை சுமார் 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழில் விபத்தில் சிக்கிய கனடா வாழ் குடும்பம்..!!!

யாழில் விபத்தில் சிக்கிய கனடா வாழ் குடும்பம்..!!!


யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று (17) இடம்பெற்ற விபத்தில் கனடா வாழ் புலம்பெயர் தமிழர்கள் சிக்கியுள்ளனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எனினும் விபத்தின்போது வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.

கனடாவில் இருந்து வந்த பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் 5 வயது சிறுமி ஆகியோர் பயணித்த காரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது்.

சாரதியின் நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய ராசிபலன் - 18.03.2025..!!!

இன்றைய ராசிபலன் - 18.03.2025..!!!



மேஷம்


மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்டுக் கொண்டிருந்த வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியிட பயணங்களில் கூடுதல் கவனமுடன் இருப்பது நன்மை தரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சமூகமுடன் இருக்கும்.

ரிஷபம்


ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நிறைந்த நாளாக காணப்படுகிறது. குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் நீங்களாகவே சென்று மூக்கை நுழைக்காதீர்கள். இன்றைய நாளில் கடினமான உழைப்பை கொடுத்தால் உழைப்பிற்குரிய அங்கீகாரம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.



மிதுனம்


மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் நினைப்பதை காட்டிலும் சுபயோக பலன்களை பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை கூடும். தொழில் செய்யும் இடத்தில் மற்றவர்களின் மனதையும் புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது. பயணங்களில் உடைமை மீது கவனம் தேவை. பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள்.

கடகம்


கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. எதிலும் அவசரப்படாமல் நிதானத்தை கையாளுங்கள். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுப்பது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சனை தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு. வெளி உணவுகளால் உடல் உபாதைகள் ஏற்படலாம், கவனமுடன் இருப்பது நல்லது. மனச்சோர்வு நீங்கும்.



சிம்மம்


சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. எண்ணியது எண்ணியபடி நடக்காமல் போகலாம். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகளில் அவசரப்படாதீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். பெண்களுக்கு பேச்சுத் திறமையால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.

கன்னி


கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கும் முயற்சிகளில் கடினத்தன்மை காணப்படும். பண ரீதியான விஷயத்தில் சொந்த முடிவுகள் எடுப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அனுகூலமான பலன்கள் பெற திட்டமிட்டு செயல்படுங்கள். கண் சார்ந்த பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கை தேவை.



துலாம்


துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்காதீர்கள். குடும்ப உறவுகளுக்குள் இதுவரை இருந்து வந்த மனகசப்புகள் மறையும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுப்பது அன்னோன்யத்தை அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் லாபம் உண்டாகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் நிம்மதி நிலவும். ஆரோக்கிய ரீதியான சிறு சிறு பிரச்சனைகளை அவ்வபோது சந்திப்பீர்கள். ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனமுடன் இருப்பது நல்லது. எதிர்பாரா நபரின் அறிமுகம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்க தியானம் மேற்கொள்ளுங்கள். யாருக்கும் அறிவுரை கூறாதீர்கள்.

தனுசு


தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் காத்துக் கொண்டிருக்கிறது. நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணங்கள் மூலம் லாபம் பார்க்கலாம். புதிய தொழில் சிந்தனைகள் உருவாகும். கொடுக்கல் வாங்கலில் சமரசம் பேசுங்கள்.

மகரம்


மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்களின் வருகை லாபம் தரும். வீண் விரயங்கள் வராமல் இருக்க திட்டமிட்டு செயல்படுங்கள். வாகன போக்குவரத்துகளில் மிதவேகம் கடைபிடியுங்கள். மனதிற்கு பிடித்தவர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

கும்பம்


கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணியது ஈடேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சாதிக்க நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தில் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் நடக்கலாம், வாயை குறைப்பது நல்லது. இடையூறாக இருந்து வந்த சில விஷயங்கள் தானாகவே விலகிச் செல்லும்.

மீனம்


மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத தன லாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய அமைப்பு உண்டு. கணவன் மனைவிக்குள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்லுங்கள். கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். தேவையான சமயத்தில் நண்பர்களின் உதவிக்கரம் கிட்டும். ஆரோக்கியம் சீராகும்.

Monday, 17 March 2025

யாழில். கையூட்டு பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் நீதிமன்றில் சரண்; விளக்கமறியலில் வைக்க உத்தரவு..!!!

யாழில். கையூட்டு பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் நீதிமன்றில் சரண்; விளக்கமறியலில் வைக்க உத்தரவு..!!!


யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலை அதிகாரியின் மகன் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டையடுத்து தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று நீதிமன்றில் சரண்டைந்தார்.

சட்டத்தரணி ஊடாக யாழ்பபாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த சந்தேக நபரை வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய தலைமை பொலிஸ் பரிசோதகரின் மகன் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்கு போக்குவரத்து பொலிஸாரால் வழக்கு பதிவு செய்த நபரிடம் நீதிமன்ற வழக்கை இல்லாமல் செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாய் கையூட்டு பெற்றுள்ளார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவு எனத் தெரிவித்தே கையூட்டுப் பெற்றுள்ளார். எனினும் கையூட்டு வழங்கிய நபருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டப்பணத்தை செலுத்தி விடுதலையான நபர், பொலிஸ் அதிகாரியின் மகனைத் தொடர்புகொண்டு வழக்கை இல்லாமல் செய்வதற்குதானே பணம் வாங்கினீர்கள் எனக் கேட்டுள்ளார். "பிணையில் விடுவதற்குதானே பணம் வாங்கினேன்" என்று கையூட்டுப் பெற்றவர் பதிலளித்துள்ளார்.

கையூட்டுப் பெற்றவரின் குரல் பதிவை பதிவு செய்த பணம் வழங்கியவர், யாழ்ப்பாணம் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்துக்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலில் அவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கையூட்டு வழங்கியவரின் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் சான்று ஆதாரமாக பொலிஸ் அதிகாரியின் மகன் கையூட்டு பெறும் சிசிரிவி பதிவும் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மகன் மீதான குற்றச்சாட்டை தவிர்க்க யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான தலைமை பொலிஸ் பரிசோதகர் மேலிடத்திடம் தொடர்புகொண்ட போதும் ஆதாரங்களுடன் முறைப்பாடு பதிவாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்த போதும் அவர் தலைமறைவாகியிருந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி முல்லைத்தீவுக்கு இடமாற்றப்பட்டார்.
மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய 1ம் பங்குனித் திங்கள்..!!!

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய 1ம் பங்குனித் திங்கள்..!!!


வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய 1ம் பங்குனித்திங்கள் பொங்கல் இன்று(17.03.2025) பக்திபூர்வமாக இடம்பெற்றது.