Saturday 9 December 2023

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் 2024 பிப்ரவரி வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..!!!

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் 2024 பிப்ரவரி வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..!!!


நவகிரகங்களில் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றுவார். ஜோதிடத்தில் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.

இந்த சுக்கிரன் தற்போது தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். மேலும் டிசம்பர் மாதத்தின் இறுதியில், அதாவது டிசம்பர் 25 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். விருச்சிக ராசியில் நுழைந்த பின், சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நிகழவுள்ளது. அதுவும் டிசம்பர் 28 ஆம் தேதி சுக்கிரன் அனுசம் நட்சத்திரத்தில் நுழையவுள்ளார்.

இந்த நட்சத்திரத்தில் 2024 பிப்ரவரி 17 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் கேட்டை நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வார். அனுசம் நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது அற்புதமான பலன்களை வழங்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

அனுசம் நட்சத்திரம்

ஜோதிடத்தின் படி, 27 நட்சத்திரங்களில் அனுசம் நட்சத்திரம் 17 ஆவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி. இந்த நட்சத்திரமானது விருச்சிக ராசியைச் சேர்ந்தது. இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இப்படிப்பட்ட கலவையில் சுக்கிரனும் நுழைவதால், இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

ரிஷபம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நிறைய வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் அழகை அதிகரிக்க நிறைய முயற்சிகளை செய்வீர்கள்.


கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். திருமணமாகாதவர்கள் எதிர்பார்த்த வாழ்க்கைத் துணையை இக்காலகட்டத்தில் கண்டுபிடிக்கலாம். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள். வாகனம், சொத்து, வீடு போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பழைய முதலீடுகளால் நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும். இதனால் உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். மொத்தத்தில் நிதி நிலை பிப்ரவரி வரை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது நன்மைகளை வாரி வழங்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு பின் உடன் பிறந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவர். புதிய வீடு, வாகனம் அல்லது ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் நிறைய செல்வத்தை குவிக்க முடியும்.
இன்றைய ராசிபலன் - 09.12.2023..!!!

இன்றைய ராசிபலன் - 09.12.2023..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தின் மீது அதிக அக்கறை இருக்கும். குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள் என்பதை கவனிப்பீர்கள். வீட்டு பெரியவர்களுக்கு என்ன தேவை, என்ன பிரச்சனை என்பதை பேசி தீர்ப்பீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவீர்கள். மனைவியின் ஆதரவு கிடைக்கும். மாமனார் வீட்டு வழி உறவால் நல்லது நடக்கும். மற்றபடி வியாபாரம் தொழில் இவைகளில் நன்மை நடக்கக்கூடிய நாள் இது. மன நிறைவான இந்த நாளில் குலதெய்வத்துக்கு நன்றி சொல்லுங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய ஆசைகள் உண்டாகும். அடுத்தவர்களை பார்த்து, அதுபோல நாமும் ரொம்ப ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். பேராசைப்பட்டு கையில் இருக்கும் பணத்தை இழக்கக்கூடாது. ஜாக்கிரதை, மனதை இன்று நீங்கள் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையானதை அந்த இறைவன் கொடுப்பான். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களை முழுசா நம்பாதீங்க. வீட்டில் பெரியவர்கள் சொல்பேச்சு கேட்பது இன்று நன்மையை தரும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையில்லாத வீண் விரைய செலவுகள் திடீரென்று வந்து நெருக்கடி செய்யும். சேமிப்பை கரைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மனசு கொஞ்சம் கஷ்டப்பட தான் செய்யும். ஆனால் கெட்ட நேரம் வரும்போது இதையெல்லாம் நம்மால் தவிர்க்க முடியாது அல்லவா. கொஞ்சம் அனுசரித்து இன்றைய நாளை கடந்து செல்லுங்கள். குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆசையை நிறைவேறக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் நிறைவேறாத ஆசையை இன்று நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் வெளியிடங்களுக்கு சென்றால் பணத்தை கணக்கு பார்த்து செலவு செய்யவும். தண்ணீராக பணம் கரைந்து போய்விட்டால் இந்த மாத இறுதியில் திண்டாட்டம் வந்துவிடும் ஜாக்கிரதை. வீட்டில் உறவினர்களின் வருகை மன நிறைவை கொடுக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை அமையும். வருத்தத்தோடு காணப்பட்டாலும் பிரச்சனைகள் பெரிய அளவில் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு பிரச்சனை என்று வரும்போது சக மனிதர்கள் உதவி செய்வார்கள். கவலைப்படாதீங்க, இன்று சுறுசுறுப்பை வர வைக்க நல்ல உடற்பயிற்சி செய்துவிட்டு காலை வேலைகளை தொடங்குங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனைகள் தலைவிரித்து ஆடியபோது, இருந்த மனக்கசப்பு இன்று சரியாகும். எப்படியாவது வாழ்ந்துவிடலாம் என்ற தன்னம்பிக்கையை இன்று உங்களுக்குள் உருவாகும். அந்த நம்பிக்கை உங்களை வாழ்க்கையின் அடுத்த படித்துக் கொண்டு செல்லும். முன்னேற்றம் நிறைந்த இந்த நாளில் உங்களால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்யுங்கள். அந்த மன நிறைவே நன்மையை நடக்க வைக்கும்.

துலாம்


துலாம் ராசி காரர்களுக்கு இன்றைய நாள் யோசனை அதிகமாக இருக்கும். அடுத்து என்ன செய்யலாம், அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். சில பேருக்கு கடந்த கால நினைவுகள் எல்லாம் ஞாபகத்தில் வரும். நல்ல நினைவுகளும் வரும். கொஞ்சம் கசப்பான நினைவுகளும் வரும். பழைய கதையை நண்பர்களுடன் பேசி நேரத்தை கழிப்பீர்கள். இதுவும் சுகமான ஒரு சுமையாக தான் இருக்கும். அனுபவ பாடங்களை இன்று கற்றுக் கொள்ளுங்கள் ‌

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக இருக்கும். டென்ஷனை எல்லாம் கீழே இறக்கி வைத்து விடுவீர்கள். மனதை லேசாக்குவீர்கள். கோவில் குளங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி அன்பு வெளிப்படும். ஒருவருக்கு ஒருவர் மனசு விட்டு பேசக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். விவசாயிகளுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று முயற்சிகள் வெற்றியைத் தரும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனது வலிமையாக இருக்கும். நிறைய பிரச்சனை வந்தாலும் அதை தட்டி தூக்கி தூர போட்டு விடுவீர்கள். அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு உங்களுடைய மனது பக்குவமாக இருக்கும். இன்றைய நாளில் நிறைய விஷயங்களை சாதிக்கலாம். உங்களுக்கு சாதகமாக நிறைய நல்ல முடிவுகள் வரும். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். பதவி உயர்வு சம்பள உயர்வுக்கு தேவையான முயற்சிகளை எடுக்கலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். காதல் கை கூடும். வீட்டில் திருமண பேச்சு வார்த்தை நடக்கும். சகோதர சகோதரி உறவு வலுபெறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களுடைய முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்து விடவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது நிம்மதியாக இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். வேலை செய்யும் இடத்திலிருந்து பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய் மண்ணை விட்டு பிரிந்து இருக்கிறோமே என்ற கவலையில் இருப்பீர்கள். எப்போது சொந்த நாடு திரும்ப வாய்ப்பு கிடைக்கும் என்ற நினைப்பும் சில பேருக்கு இருக்கும். நல்லது நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனசு கவலையாக இருக்கும். சில பேருக்கு வருமானத்தில் பிரச்சனை இருக்கும். சம்பளம் வராததால் செலவை சமாளிக்க முடியாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாகனம் பழுது பார்ப்பது, வீட்டில் போனது வந்ததை பழுது பார்ப்பது என்று செலவுகளை சமாளிப்பதற்கு சிக்கல்கள் உண்டாகும். கொஞ்சம் குபேரரின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் சரியாகும். மன வருத்தப்படாதீங்க. உதவி என்றால் மனைவியை கேளுங்க. அனா அவசியமா மற்றவர்களிடம் கடன் வாங்கும் பழக்கத்தை நிறுத்திடுங்க.

Friday 8 December 2023

யாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை..!!!

யாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை..!!!


மின்சாரத் தொகுப்பு பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(09.12.2023) காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ்.கே.கே.எஸ்.வீதி தட்டாதெரு, மாவடி, மனோகரா- நாவலர் வீதி, ஸ்ரீராகவேந்திரா என்ரபிறைசஸ், எவர்கிறீன் அச்சகம், ஹரிகணன் பிறைவேட் லிமிரட், அரசடி வீதி- சீனியர் வீதி, ஐயனார் கோவிலடி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலையில் கல்வி கற்கும் காலம் ஒரு வருடம் குறைகிறது..!!!

பாடசாலையில் கல்வி கற்கும் காலம் ஒரு வருடம் குறைகிறது..!!!



பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13இல் இருந்து 12ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில், சபை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023ஆம் ஆண்டில் கல்வியமைச்சின் வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளன.

இதன்போதே, உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பாக பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தை ஒரு வருடம் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கல்வி மறுசீரமைப்பு மூலம், ஒவ்வொரு மாணவர்களும் 17 வயதில் பாடசாலைக் காலத்தை முடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதாவது, 4 வயதில் முன்பள்ளியும், ஆரம்பப் பிரிவு 1 முதல் 5ஆம் தரம் வரையிலும், கனிஷ்ட பிரிவு தரம் 6 முதல் தரம் 8 வரையிலும், சிரேஷ்ட பிரிவு தரம் 9 முதல் தரம் 12 வரையிலும் வகைப்படுத்தப்படவிருப்பதாக கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், 10ஆம் ஆண்டில் சாதாரணதரப் பரீட்சையையும், 12ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையையும் நடத்த கல்வியமைச்சு முன்மொழிந்துள்ளது.

மேலும், சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 9இல் இருந்து 7ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டது..!!!

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டது..!!!


இலங்கையில் முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டச் செயலகத்தில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் தலைமையில், டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம், விரைவில் ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் உள்ள இலக்கம், சர்வதேச தரநிலைகள் மற்றும் நடைமுறைகளின்படி, தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கமாகவும் பயன்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - சந்தேகநபர்களை அடையாளம் காட்டிய சாட்சி..!!!

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - சந்தேகநபர்களை அடையாளம் காட்டிய சாட்சி..!!!



வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சந்தேகநபர்களான நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் வழக்கின் பிரதான சாட்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அடையாளம் காட்டியுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு போலீஸ் உத்தியோகஸ்தர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, நடைபெற்ற அடையாள அணி வகுப்பில் வழக்கின் பிரதான சாட்சியான , கொலையான இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் மன்றில் தோன்றி சந்தேகநபர்களை அடையாளம் காட்டினார்.

அதனை தொடர்ந்து நான்கு சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு நீதவான் நீடித்து உத்தரவிட்டதுடன், வழக்கினையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.