Wednesday, 4 October 2023

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு..!!!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு..!!!



லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 343 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய 3470 விலை ரூபாய் ஆகும்.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1393 ரூபாவாகும்.

அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 650 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
யாழில் மனித சங்கிலி போராட்டம்..!!!

யாழில் மனித சங்கிலி போராட்டம்..!!!


முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவு வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.















இன்றைய ராசிபலன் - 04.10.2023..!!!

இன்றைய ராசிபலன் - 04.10.2023..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். எல்லா வேலையிலும் அதிக ஈடுபாடு இருக்கும். ஒரு வேலையை பொறுப்பாக செய்து முடிப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சுற்றி இருப்பவர்களிடமிருந்து பாராட்டும் புகழும் பெறுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரப் போகின்றது. சொந்த தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பொழுதுபோக்கு நிறைந்த நாளாக இருக்கும். அதாவது ஃபிரண்டுடன் சினிமா பார்க்க செல்வது, பீச், பார்க் செல்வது என்று சந்தோஷமாக நேரத்தை கழிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் கையில் இருக்கும் பணம் கொஞ்சம் செலவும் ஆகத்தான் செய்யும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பின்னடைவு ஏற்படும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வாய்ப்பு உள்ளது. அதையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க. சொந்த தொழிலில் புதிய ஆட்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். ஆனால் நீங்கள் அடுத்தவர்களை எக்காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக்கூடாது. அடுத்தவர்கள் மீது பழி போடும் போது உங்களுக்கு சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மற்ற படி வேலை செய்யும் இடம் சொந்த தொழிலில் எதிர்பார்த்த நல்லது நடக்கும். பிரச்சனைகள் இருக்காது. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை அதிகம் செலவு செய்வீர்கள். அதனால் அலுவலக வேலையில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். சொந்த தொழிலில் கவனக்குறைவு காரணமாக சிலர் உங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. கவலைப்படாதீங்க பெரிய நஷ்டம் இருக்காது. அனுபவரீதியாக நிறைய பாடங்களை கற்றுக் கொள்வீர்கள். என்னதான் கேலியும் கிண்டலும் சேர்ந்து நாள் நகர்ந்தாலும் உங்களுடைய பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் செய்யக்கூடிய நல்ல காரியங்களை பற்றி உங்கள் ஊர், உங்கள் தெருவே பேசக்கூட வாய்ப்புகள் உள்ளது. அந்த அளவுக்கு உங்களுடைய எண்ணங்களும் செயல்பாடும் உயர்வாக இருக்கும். நீங்கள் கேட்காமலேயே பெயர் புகழ் பதவி உங்களை தேடி வரும் பாருங்க. கணவன் மனைவிக்கிடையே சண்டை வர வாய்ப்பு உள்ளது. வாக்குவாதம் செய்யாதீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு ஏற்படும். எந்த வேலையிலும் மனசு ஈடுபடாது. கொஞ்ச நேரம் கண்களை மூடி தூங்கலாம் என்று மனசு சொல்லும். ஆனால் வேலை பளு தூங்கவிடாமல் தடுக்கும். இப்படி சின்ன சின்ன தடுமாற்றம் இருப்பதால் சின்ன சின்ன தோல்விகளும் இருக்கும். கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும். வாய்ப்பு கிடைத்தால் லீவு போட்டு விட்டு வீட்டிலேயே தூங்கி ஓய்வு எடுக்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசக்கூடாது. உணர்ச்சிவசப்பட்டு யாரையும் திட்டவும் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அமைதியாக சென்றால் பிரச்சனை இல்லை. வாக்குவாதம் செய்வதன் மூலம் உங்கள் மனசு தான் கஷ்டப்படும். மற்றபடி செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கமிஷன் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகளை போராடி ஜெயிக்கவே சரியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன எதிரிகள், சொந்த தொழிலில் போட்டியாளர்கள் என்று எல்லோரும் உங்களை விரட்டுவார்கள். வீட்டு பக்கத்தில் இருப்பவர்கள் கூட சண்டை போடுவார்கள் என்றால் பாருங்கள். அந்த அளவுக்கு நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். வேறு வழி கிடையாது. எதிரிகளை எப்படியாவது சமயத்தில் கொள்ளுங்கள். எதிர்த்து சண்டை மட்டும் போடாதீங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகமாக இருக்கும். அதே சமயம் செலவும் அதிகமாக இருக்கும். வந்த சம்பளத்தை பத்திரமா வச்சுக்கோங்க. மாத கடைசி வரை அதை வைத்து தான் ஓட்ட வேண்டும். யார் யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக பணத்தை வாரி இறைக்காதீங்க. புத்தி மயங்கி போக வாய்ப்புகள் உள்ளது. மூன்றாவது நபர் பேச்சை முழுசாக நம்பினால் நஷ்டம் உங்களுக்கே.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் வந்த சிக்கல் வந்த வழி தெரியாமல் உடனே சரியாகிவிடும். கவலைப்படாதீங்க கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு. இன்று வெளியே செல்வதற்கு முன்பு குலதெய்வத்தை வழிபாடு செய்து விட்டு சென்றால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். மனதை சரி செய்ய கொஞ்ச நேரம் உங்கள் குழந்தைகளுடன் விளையாடுங்கள். அப்படி இல்லை என்றால் கோவிலுக்கு செல்லுங்கள். வேலை பளு அதிகமாக உள்ள சமயத்தில் முன்கோபம் வரும். உடன் பணிபுரிபவர்களிடம் சண்டை போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை விவசாயிகளுக்கு இந்த நாள் முன்னேற்றத்தை தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த உடல்நிலை பிரச்சினை இன்று சரியாகும். எப்போதும் போல வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். சொந்த தொழிலில் எதிர்பார்த்த நல்லது நடக்கும். வாரா கடன் வசூலாகும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். வீன் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள்.

Tuesday, 3 October 2023

இந்த வார ராசிபலன் 02.10.2023 முதல் 08.10.2023 வரை..!!!

இந்த வார ராசிபலன் 02.10.2023 முதல் 08.10.2023 வரை..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்பம் மிகுந்த வாரமாக திகழப்போகிறது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பண வரவு எதிர்பார்த்த படி இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நன்மை பயக்கும். உடல் நலம் சீராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதேபோல் குடும்பத்தில் தங்களுக்கு என்று வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

வேலையை பொறுத்தவரை எப்போதும் போல் வழக்கமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும். அலுவலக ரீதியாக வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொழில் எதிர்பார்த்த அளவு லாபத்தை கொடுக்காது. மறைமுக எதிரிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் எடுப்பதை இந்த வாரம் தள்ளி வைப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பணவரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. அதிக அளவு செலவுகள் ஏற்பட்டாலும் அதை எளிதில் சமாளித்து முடித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய பேச்சு வார்த்தைகள் வீட்டில் நடைபெறும். பயணங்களால் லாபம் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வேலையை பொறுத்தவரை புதிதாக வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு திடீர் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இருப்பினும் திட்டம் தீட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். மூன்றாவது நபர் தலையிடுவதை தவிர்த்தால் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் சற்று காலதாமதமாக வெற்றி கிடைக்கும்.

வேலையை பொறுத்தவரை பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விற்பனையில் லாபம் அதிகமாகவே இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையுடன் இருக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. வீண்விரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ஆதலால் பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு ஏற்படும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து எடுப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்குள் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.

வேலையை பொறுத்தவரை பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றமும் ஏற்படக்கூடும். வியாபாரத்தை பொருத்தவரை வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அந்த முயற்சிக்குரிய முதலீடுகளும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடாசலபதியை வழிபட வேண்டும்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகள் வெற்றியடையும் வாரமாக திகழப் போகிறது. வருமானத்திற்கு எந்த வித குறைவும் இருக்காது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பல வகைகளில் பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.

வேலையை பொறுத்தவரை பணி சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். அதனால் பல சலுகைகளை பெறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் இருக்காது. என்றாலும் நஷ்டமாகாமல் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியை தொடங்க ஆரம்பிக்க சிறந்த வாரமாக இந்த வாரம் இருக்கும். மேலும் இந்த வாரம் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாலை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சினைகளை சமாளிக்க கூடிய வாரமாக திகழப்போகிறது. பணவரவை பொருத்தவரை திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை உங்கள் சாமர்த்திய தனத்தால் சரி செய்து விடுவீர்கள். பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. அத்யாவசிய பயணத்தை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்து இருந்த கடன் திரும்ப கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. செயல்திறன் அதிகரிக்க கூடிய வாரமாக திகழப் போகிறது.

வேலையை பொறுத்தவரை கடினமாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைப்பது சிரமம் தான். இருப்பினும் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு முடிவெடுக்க வேண்டும். லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விலகிய உறவுகள் விரும்பி வந்து சேரும் வாரமாக திகழப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி அன்போடு அன்யோன்யம் ஏற்படும். வரவிற்கு ஏற்ற செலவு ஏற்படும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். தவறாக புரிந்து கொண்ட அனைவரும் விரும்பி வந்து தங்களை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

வேலையை பொறுத்தவரை எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உயர் அதிகாரிகளின் ஆதரவால் அலுவலகத்தில் பல நல்ல நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயலாற்றுவீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடன் இருப்பவர்களுடன் சாதகமான சூழ்நிலை ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வைஷ்ணவி தேவியை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய வாரமாக திகழப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள முக்கியமான விஷயங்களை இருவரும் பேசி சுமுகமாக முடித்து வைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருந்தாலும் அதற்காக கடன் வாங்குவதை சமாளித்து விடுவீர்கள். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுத்து நன்மை அடைவீர்கள்.

வேலையை பொறுத்தவரை உடன் வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு அதிகமாக கிடைக்கும். இருப்பினும் உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது கவனமாகவும், நிதானமாகவும் பேச வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்க்க லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வியாபாரத்தை முன்னேற்ற என்ன செய்யலாம் என்ற யோசனை மனதிற்குள் அதிகரிக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மனதில் தேவையற்ற வீண் குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒரு செயலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன் தீவிரமாக யோசித்து செயலாற்றினால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும்.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். சலுகைகளும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எப்போதும் போல் இல்லாமல் சற்று அதிகமாகவே உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்க்காத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் சாதகமான சூழ்நிலையில் இல்லை. எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறுவதற்குரிய சாதகமான சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தங்கள் உடல் நலனில் மட்டுமில்லாமல் குடும்பத்தாரின் உடல் நிலையிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

வேலையை பொறுத்தவரை பணி சுமை சற்று அதிகமாகவே இருந்தாலும் அவை அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வேலை எதிர்பார்த்த இடத்தில் நல்ல சம்பளத்துடன் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபத்தை விட சற்று அதிகமாகவே லாபம் கிடைக்கும். வியாபாரத்தை பற்றி இதுவரை இருந்து வந்த கவலை நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணப்புழக்கம் அதிகரிக்கும் வாரமாக திகழப் போகிறது. இதுவரை ஏற்பட்டிருந்த தேவையில்லாத செலவுகள் குறைவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் சேமிப்பு என்பது ஏற்படும். பிறரிடம் பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுத்தால் அது சாதகமாக இருக்கும். வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொறுத்தவரை அதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது விரும்பிய இடமாற்றம் ஆகியவை கிடைக்கவும் வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தை பொருத்தவரை வியாபாரம் நல்ல முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல ஆரம்பிக்க போகிறது. வியாபாரத்தில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதற்கு தீவிரமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும் இந்த வாரம் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மாரியம்மனை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும் கூடிய வாரமாக திகழப் போகிறது, எதிர்பார்த்த வருமானத்தை விட கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சில சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சுப செய்தி விரைவிலேயே கிடைக்கும்.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் அலட்சியப் போக்கை தவிர்த்து கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்பொழுதுதான் முன்னேற்றம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் தென்படும். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபத்தை விட அதிகமாகவே கிடைக்கும். எந்த அளவுக்கு அதிகமாக கிடைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு அதிகமாக உழைக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். அதனால் வியாபாரத்தை மேலும் விரிவாக்க முயற்சிப்பீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.
காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி..!!!

காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி..!!!


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை உரிமையாளர்கள் வேலி அடைத்து அறிக்கைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ஆனாலும் குறித்த பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை.

அதனால் அக்காணி உரிமையாளர்கள் அப்பகுதியில் குடியமர முடியாத நிலை காணப்படுகிறது.

அந்நிலையில் அப்பகுதிக்குள் ஊடுருவும் இரும்பு திருடர்கள் வீடுகளில் உள்ள இரும்புகளை திருடி சென்றனர். அது குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலர் , காங்கேசன்துறை பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு பல தடவைகள் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாடு செய்தும் திருட்டினை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , இரும்பு திருடர்கள் சுதந்திரமாக அப்பகுதிகளில் நடமாடி திரிகின்றனர்.

இந்நிலையில் காணி உரிமையாளர்கள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் , தமது காணிகளுக்குள் ஊடுருவும் திருடர்களை கட்டுப்படுத்தும் முகமாக தமது காணிகளை சுற்றி வேலி அடைத்து , அக்காணிகளை அறிக்கைப்படுத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை அடுத்து அப்பகுதியில் தமது காணிகளை சுற்றி வேலி அடைக்க பிரதேச செயலர் அனுமதி அளித்துள்ளார்.

அதேவேளை 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த மாங்கொல்லை வைரவர் ஆலய திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆலயத்திற்கு மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




சனி பெயர்ச்சி பலன் 2023; 30 ஆண்டுகளுக்குப் பின் தேடி வரும் கோடீஸ்வர யோகம்..!!!

சனி பெயர்ச்சி பலன் 2023; 30 ஆண்டுகளுக்குப் பின் தேடி வரும் கோடீஸ்வர யோகம்..!!!


ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார். எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்ற முதுமொழி ஒன்றும் உண்டு.

சனி பகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார்.

அந்தவகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனிபகவானால் 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்களுக்கு பதவி பட்டம், கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார்.

அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார். சனிபகவான் கும்ப ராசியான தனது சொந்த வீட்டில் பயணம் செய்கிறார்.

இந்த சனி பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிகள் யார்? அதேபோல 12 ராசிகளிலும் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என பார்க்கலாம்.

மேஷம்:

லாப சனி மேஷ ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகிறார். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம்.

அரசியல்வாதிகளுக்கு சொல்வாக்கு உயரும். சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள். உங்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும்.

ரிஷபம்:

பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனியால் சச யோகம் செயல்படும். இந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு புது பதவி கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது.

புதிய கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.

மிதுனம்:

அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். ஏனெனில் இது தர்ம சனி காலம். பதவியில் உயர்வு புரமோசன் கிடைக்கும். நிறைய தான தர்மங்களை செய்யுங்கள். கோடி கோடியாக கொட்டித்தரப்போகிறார் சனி பகவான்.

கடகம்:

எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும்.

வரக்கூடிய பணத்தை கவனமாக கையாளுங்கள். பேராசை பெரு நஷ்டமாகிவிடும்.

சிம்மம்:

உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனியால் மிகப்பெரிய சச யோகம் தேடி வரப்போகிறது. சிம்ம ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு புகழ், செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். பணம் பல வழிகளிலும் வரப்போகிறது. வீண் செலவுகளை தவிர்த்தால் சேமிக்கலாம்.

கன்னி:

சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார்.

கன்னி ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இனி இரண்டரை ஆண்டு காலம் ராஜயோக காலம் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

துலாம்:

உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறப்போகிறது. இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இனி வளர்ச்சிதான். ஏற்றம் தரும் சனி பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரப்போகிறார்.

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் சச யோகம் தேடி வரப்போகிறது. இனி உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. ஆசைகளை குறிக்கோள்களை சனி பகவான் நிறைவேற்றுவார்.

விருச்சிக ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு பதவிகளும் பட்டங்களும் தேடி வரப்போகிறது.

தனுசு:

ஏழரை சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறப்போகிறது. உங்கள் ராசிக்கு இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கப்போகிறது. காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.

இந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். பதவிகளும் பட்டங்களும் தேடி வரப்போகிறது. கோடி கோடியாக வரப்போகும் செல்வத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

மகரம்:

ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. இரண்டரை ஆண்டு காலங்கள் கஷ்டங்களைக் கடந்து விடுவீர்கள். உங்களின் புதிய பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும்.

எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துடுவோமே என்ற தெம்பு வந்து விடும். நிதானமாக அடி எடுத்து வைப்பது அவசியம்.

கும்பம்:

சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். ஜென்ம சனி காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு அதிகரிக்கும். குருவின் பயணம் சாதகமாக இருப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். 2024ஆம் ஆண்டு முதல் பண விசயங்களில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.

மீனம்:

ஏழரை சனி ஆரம்பம் என்பதால் எதிலும் கவனமும் நிதானமும் தேவைப்படும். மீன ராசியில் பிறந்தவர்களுக்கு முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. இந்த கால கட்டத்தில் சனிபகவான் விபரீத ராஜயோகத்தையும் தருகிறார்.

அரசியல்வாதிகளுக்கு சனிபகவானின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரப்போகிறது என்றாலும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இரண்டரை ஆண்டுகளுக்கு பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.
யாழ். சாவகச்சேரியில் 200 ஆண்டுகள் பழைமையான மரம் சாய்ந்தது..!!!

யாழ். சாவகச்சேரியில் 200 ஆண்டுகள் பழைமையான மரம் சாய்ந்தது..!!!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில், மரம் முறிந்து விழுந்தமையால் , யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் தடைபட்டு இருந்ததுடன் , நகருக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர் பகுதியில் நின்ற சுமார் 200 வருட காலத்திற்கு மேற்பட்ட வேப்ப மரம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முறிந்து வீதிக்கு குறுக்கே விழுந்துள்ளது.

அதனால் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து தடைப்பட்டது. அத்துடன் மின்சார வயர்களுக்கும் மேலும் மர கிளைகள் விழுந்தமையால் , மின்சார கம்பங்கள் முறிவடைந்ததுடன் , நகர் பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டது.

அத்துடன் மரத்திற்கு கீழ் இருந்த அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு டிக்கெட் விற்கும் கடையும் சேதமடைந்ததுடன் , மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

சாவகச்சேரி நகர சபை , இலங்கை மின்சார சபையினர், நகர் பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தியதுடன் , வீதி ஊடான போக்குவரத்தை சீர் செய்தனர்.