Saturday 27 July 2024

யாழில் இளைஞனை கடத்திச் சென்று சித்திரவதை செய்து வீதியில் போட்டுவிட்டு தப்பிய கும்பல்..!!!

யாழில் இளைஞனை கடத்திச் சென்று சித்திரவதை செய்து வீதியில் போட்டுவிட்டு தப்பிய கும்பல்..!!!


யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று நேற்று(26) மாலை இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியில் இருந்து காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.

இதன்போது அங்கு கூடிய இனந்தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று தலை முடியை வெட்டி வாளால் உடலில் வெட்டி சித்திரவதை செய்துள்ளனர்.

இதன்பின்னர் குறித்த இளைஞனை உடுவில் பகுதியிலுள்ள வீதியொன்றில் போட்டுவிட்டு குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.இதனால் அப்பகுதியில் பரபரப்பான சுழல் ஏற்பட்டுள்ளது.

பூநகரி கிராஞ்சியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளதுடன் பொலிஸாருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்துள்ள இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்க்கப்படமாட்டார்கள்..!!!

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்க்கப்படமாட்டார்கள்..!!!


டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அனைத்துக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும் என்றும், 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் இளநிலைக் கல்விப் பட்டதாரிகளாக இருப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேகமாக மாறிவரும் அறிவுக்கு ஏற்ப, ஆசிரியர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொரு தொழில் வல்லுநர்களும் தங்கள் அறிவைப் புதுப்பிக்க வேண்டும்.

இதற்கிடையில், ஆரம்பக் கல்வியின் அடிப்படையான அழகியல் பாடத்தை ஒருபோதும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாது என்று அமைச்சர் கூறுகிறார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களை இணைத்து பாடசாலை பாடத்திட்டம் ஆக்கப்பூர்வமாக சர்வதேச தர கல்விக்கு உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிடுகிறார்.

அதன்படி, 100 பாடசாலைகளில் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து அந்த ஆசிரியர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற உரிமம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இன்றைய ராசிபலன் - 27.07.2024..!!!

இன்றைய ராசிபலன் - 27.07.2024..!!!



மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஒருநிலைப்படும். கடமையில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியப் போக்கு இருக்காது. மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். கூடா நட்பிடம் இருந்து விலகி இருந்தால் வாழ்க்கையில் இன்னும் நல்லது நடக்கும். வாழ்க்கை துணை சொல்வதை நிதானமாக செவி கொடுத்து கேட்டால் நிச்சயம் நல்லது நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று சௌகரியமாக இருப்பீர்கள். உங்களுக்கு தேவையான நல்லது எல்லாம் நடக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட பெரிய அளவில் பாராட்டக் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் இரட்டுப்பு மடங்கு உயர்ந்த நிலையை அடைவீர்கள். தொழிலில் எதிர்பாராத வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். சந்தோஷமாக உணவை சாப்பிட்டு சந்தோஷமாக வீட்டில் இருப்பவர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். முடிந்தால் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று நன்றியை தெரிவிக்கவும். வீட்டில் சுபகாரிய தடைகள் விலகும் நல்லது நடக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் வரும். புதிய முயற்சிகளை நாளை தள்ளி போடுங்கள். சுபகாரிய பேச்சுகளையும் தள்ளி போடவும். அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். எந்த வேலையையும் அடுத்த நாள் செய்ய வேண்டும் என்பதற்காக தள்ளி வைக்காதீங்க. சோம்பேறித்தனத்தை விளக்கி விடுங்கள். நேரத்தை வீணாக செலவழிக்காமல் அன்றைக்கான வேலையை அன்றே முடித்தால் நீங்கள் தான் ராஜா.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை தைரியம் எதுவுமே இருக்காது. கொஞ்சம் கோழைத்தனம் வெளிப்படும். ஆனால் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாதீர்கள். உங்களை நிறைய பேர் ஏமாற்ற காத்துக் கொண்டு இருக்கிறார்கள். பயந்தால் கூட, தைரியசாலி போல நடித்தால் வெற்றி அடையலாம். துணிச்சலோடு செயல்படுங்கள். கடவுள் உங்க பக்கம் இருக்கார் பயப்படாதீங்க.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். கொஞ்சம் சுப செலவுகள் உண்டாகும். கோவிலுக்கு செல்லக்கூடிய பாக்கியம் சில பேருக்கு கிடைக்கும். தெய்வீக ரீதியாக நிறைய நல்ல விஷயங்களை செய்து மன திருப்தியை அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று வாயை அடக்க வேண்டும். அதிகம் பேசக்கூடாது. முடிந்தால் மௌன விரதம் இருங்கள். யார் என்ன சொன்னாலும் தலையை ஆட்டிக்கொண்டு சரி சரி என்று சென்றால் பிரச்சனை இல்லை. வாக்குவாதம் செய்யாதீங்க. சிக்கல் வம்பு சண்டைக்கு போகாதீங்க. தானா தேடி வரும் சண்டையையும் விட்டு விலகி நில்லுங்கள். அவ்வளவுதான் இன்று உங்களுக்கான பாடம்.

விருச்சிகம்

விருச்சக ராசி காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும். குள்ளநரி தன வேலையை செய்ய வேண்டிய சூழ்நிலை இன்று உங்களுக்கு உண்டாகும். சில தந்திர வேலைகளை செய்தால் தான் வாழ்க்கையில் பிழைக்க முடியும். அதை விட்டுவிட்டு நேர்மையாக பேசுகிறேன் என்று, பேசக்கூடாத இடத்தில், பேசக்கூடாத விஷயத்தை பேசி மாட்டிக் கொண்டால் பிறகு யாராலும் உங்களை காப்பாற்ற முடியாது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று படபடப்பாக இருக்கும். எந்த வேலையிலும் ஆர்வம் இருக்காது. துடிப்போடு செயல்படுகிறேன் என்று சொல்லி சில காரியங்களை தவறாக செய்யவும் வாய்ப்புகள் இருக்கிறது. பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவும். குழந்தைத்தனமாக இருக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். கடன் சுமை குறைய சேமிப்பை உயர்த்தவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக தான் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். வேலை சுமூகமாக செல்லும். சொன்ன நேரத்தில் சொன்ன வேலையை முடித்துக் கொடுத்து விடுவீர்கள். நீண்ட தூர பயணத்தை கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளவும். மூன்றாவது நபரிடம் பழகும் போது எல்லைக்கோடு போட்டுக் கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய விஷயத்தில் நீங்கள் மூக்கை நுழைக்காதீர்கள். ஊர் வம்பு பேசினால் இன்று பிரச்சனை வந்து சேரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் அமைதியாக இருப்பீர்கள். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் தாங்கிக் கொள்வீர்கள். இடியே வந்து தலையில் விழுந்தாலும் அசராமல் அப்படியே நிற்பீர்கள். இன்னைக்கு உங்க மன உறுதியை பாராட்டலாம். இதனால் உங்களுக்கு நிறைய பக்குவங்கள் கிடைக்கும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பயப்படாதீங்க பொறுமையாக இருப்பவர்கள் என்றுமே தோற்றுப் போவது கிடையாது. பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு வரும். கடவுள் உங்கள் பாரத்தை நிச்சயம் குறைப்பான் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் பிரச்சினையிலிருந்து விடுபட்டது போல ஒரு உணர்வு இருக்கும். ஆனால் நிஜமாவே நீங்க பிரச்சினையில் தான் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரியாது. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் முழு ஈடுபாடுடன் செய்யுங்கள். முழு கவனத்தோடு செய்யுங்கள். கவனக்குறைவு உங்களுக்கு பிரச்சனையை கொடுத்து விடும்‌. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலித்தரும் என்பதை நீங்கள் நினைவில் வைக்கவும்.

Friday 26 July 2024

யாழில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் கொள்ளை..!!!

யாழில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் கொள்ளை..!!!


யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் மோட்டார் சைக்கிளில் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோண்டாவில் வீதியில் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, கோண்டாவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக காலை நொண்டியவாறு இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளை வழி மறித்துள்ளார்.

அதனால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்திய வேளை, நொட்டிக் கொண்டிருந்த நபர் தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டியை வெட்ட முயன்றுள்ளார்.

அதற்கு இளைஞன் எதிர்ப்பு காண்பிக்க , வீதியின் ஓரத்தில் மறைந்திருந்த மற்றுமொரு இளைஞனும் வாளுடன் வெளியே வந்து இளைஞனை வெட்ட முயன்ற வேளை இளைஞன் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

அதனை அடுத்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்ட தாக்குதலாளிகள் இருவரும் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாண் விலை குறைப்பு..!!!

பாண் விலை குறைப்பு..!!!



பாண் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.