Thursday, March 23, 2023

புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம் - சாவகச்சேரியில் நிகழ்வு..!!!

புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம் - சாவகச்சேரியில் நிகழ்வு..!!!


'புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம்' எனும் தொனிப்பொருளில் 56ஆவது தேசிய புத்தரிசி பெறும் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் சாவகச்சேரி கமநல சேவைகள் நிலையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் விவசாயிகளால் அறுவடை செய்த புதிய நெல்லில் இருந்து பெற்ற அரிசி வழங்கப்பட்டது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி அனுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மஹா போதியில் வாசம் செய்யும் புத்த பகவானை ஆராதிப்பதற்கு மார்ச் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் உங்களுக்கு அருகில் உள்ள கமநல சேவைகள் நிலையத்திற்கு புத்தரிசியை எடுத்து வந்து வழங்க முடியும் என கமநல சேவை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழில். மனித பாவனைக்கு உதவாத புளியை வைத்திருந்தவருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம்..!!!

யாழில். மனித பாவனைக்கு உதவாத புளியை வைத்திருந்தவருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம்..!!!



மனித பாவனைக்கு உதவாத பழப்புளியை மீள் பொதி குற்றச்சாட்டில் கைதான நபரை குற்றவாளியாக கண்ட நீதிமன்று 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.

கடந்த ஒக்டொபர் மாதம் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள களஞ்சிய சாலை ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் பழப்புளி பொதி செய்யப்படுவதாக பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைத்த பொது சுகாதார பரிசோதகர் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்ட 6 ஆயிரம் கிலோ பழப்புளியை கைப்பற்றி இருந்தார்.

மறுநாள் 26ஆம் திகதி யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் கைப்பற்றப்பட்ட பழப்புளியையும் , அதனை உடைமையில் வைத்திருந்த நபரையும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கினை விசாரணை செய்த நீதவான் , புளியை உடைமையில் வைத்திருந்தவரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார். அத்துடன் கைப்பற்றப்பட்ட பழப்புளியை பரிசோதனைக்காக அரச இராசயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கை பெறுமாறும் கட்டளையிட்டார்.

இந்நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த சந்தேகநபர் கடுமையான நிபந்தனைகளுடன் 36 நாட்களின் பின்னர் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் அடிப்படையிலும் , அரச இராசயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் பழப்புளி வண்டுகள் தாக்கி , மனித பாவனைக்கு உதவாதது என கிடைக்கப்பெற்றதை அடுத்து , புளியை உடைமையில் வைத்திருந்த நபரை குற்றவாளி என கண்ட நீதிமன்று 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
அச்சுவேலி வைத்தியசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் மருந்து வகைகள் அன்பளிப்பு..!!!

அச்சுவேலி வைத்தியசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் மருந்து வகைகள் அன்பளிப்பு..!!!


அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு செல்வச் சன்னதி ஆசிரமத்தின் மோகன் சுவாமியின் ஏற்பாட்டில் மருத்து வகைகள் வழங்கி வைக்கப்பட்டது.

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம் இன்றைய தினம் வியாழக்கிழமை இந்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சிறுவர்களுக்கான, அத்தியாவசிய மருந்து பொருட்கள் உள்ளிட்ட மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
உடுப்பிட்டியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!

உடுப்பிட்டியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரைநகர் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி சுதன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார். ஒரு குழந்தையின் தந்தையாவார்.

காரைநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், உடுப்பிட்டி பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டில் மேசன் வேலை செய்யும் போது, வீட்டின் மேற்புறத்தில் கம்பியை கொண்டு வேலை செய்த வேளை, கம்பியானது பிரதான வீதியில் சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பியுடன் தொடுகையுற்றதால் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அங்குள்ளவர்கள் அவரை மீட்டு வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து, மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்ட கரு தொடர்பில் வெளியான தகவல்..!!!

யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்ட கரு தொடர்பில் வெளியான தகவல்..!!!



யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் வீசப்பட்டிருந்த வளர்ச்சியடையாத சிசுவின் சடலம் கருச்சிதைவு காரணமாக அகற்றப்பட்டதாக இருக்கலாம். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 22ம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த வளச்சியடையாத சிசுவின் சடலம் தொடர்பாக ஊடகங்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்த ஒரு பெண் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அதனை போதனா வைத்தியசாலையின் பாவனையற்ற மலசல கூடத்தொகுதியில் வீசி இருக்கலாம் என நம்புகிறோம்.

இந்நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசாரிடமும் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளோம் விசாரணைகள் இடம்பெறுகிறது. என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்றைய டொலர் பெறுமதி..!!!

இன்றைய டொலர் பெறுமதி..!!!

 


இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 328.60 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.03.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.