Sunday 25 October 2020

கொழும்பில் மேலும் 4 பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு..!!!

SHARE


கொழும்பு மாவட்டத்தில் புறக்கோட்டை, கொழும்பு கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த தகவலை அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கம்பஹா மாவட்டம் மற்றும் கொழும்பின் சில பகுதிகள் உள்பட 56 பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE