Sunday 17 January 2021

மன்னாரில் ஆடை விற்பனை நிலையமொன்றில் கடமையாற்றியவருக்கு கொரோனா..!!!

SHARE


மன்னார் பஸார் பகுதியிலுள்ள ‘வன் மினிற்’ ஆடை விற்பனை நிலையத்தில் கடமையாற்றியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் பஸார் பகுதியில் கடந்த புதன்கிழமை காலை, வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், வர்த்தக நிலையங்களில் வேலை  செய்கின்றவர்கள் என அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டு, மன்னார் புதிய பேரூந்து நிலைய பகுதியில் வைத்து சுகாதார துறையினரினால் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

முதல் கட்டமாக கிடைக்கப்பெற்ற பரிசோதனை அறிக்கையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் உள்ள ‘வன் மினிற்’ ஆடை விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் ஒருவருக்கே  இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை குறித்த ஆடை விற்பனை நிலையத்திற்குச் சென்று மிகவும் நெருக்கமாக நடந்து கொண்ட வாடிக்கையாளர்கள், நண்பர்கள் உடனடியாக தமது பிரதேசத்திலுள்ள பொது சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு, தங்களின் விபரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE