யாழ்.மாவட்டத்தில் 108 பேர் உட்பட வடக்கில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளிலேயே 143 பேருக்கு தொற்று உறுதியானது.
அதனடிப்படையில், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேர், யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேர், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேர் உள்ளிட்ட 108 பேருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதியாகியுள்ளது.
அதேவேளை வவுனியாவில் 28 பேருக்கும், முல்லைத்தீவில் 6 பேருக்கும் , கிளிநொச்சியில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.