பண்ணை கடலில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு..!!!


யாழ்ப்பாணம் பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் (வயது 31) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பண்ணை பாலத்தடியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதை கழித்துக்கொண்டு இருந்தவேளை தவறி விழுந்துள்ளார்.

தவறி விழுந்தவரை பாலத்தின் கீழான நீரோட்டம் அடித்து சென்றிருந்த நிலையில் நேற்றைய தினம் சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக கடற்படையினை தேடுதல் நடாத்தி இருந்தனர்.

இந்நிலையில் பண்ணை பகுதியிலிருந்து இன்றையதினம் திங்கட்கிழமை காலை இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Previous Post Next Post


Put your ad code here