தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றிவந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்ட நிலையில், பருத்தித்துறை தேசிய தேமிப்பு வங்கி கிளை இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தருடன் தொடர்பில் இருந்த அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டதாக இன்று (11) அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையில் பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களையும் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.