Monday 21 February 2022

ஒரே நாளில் 24 வயோதிபர்கள் பலி

SHARE

 


நாட்டில் மேலும் 30 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


அதன்படி, நாட்டில் இதுவரை 16,024 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 24 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் 6 பேர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,119 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 636,837 ஆக அதிகரித்துள்ளது.
SHARE