14 மாதக் குழந்தையின் உயிரைப் பலிகொண்ட போத்தல் மூடி..!!!
சிறிய போத்தல் மூடி ஒன்று தொண்டையில் சிக்கியதால் 14 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளதாக திவுலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நூனகஹ மேற்கு அதிகாரிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்த குழந்தையாகும்.
ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை அங்கு உயிரிழந்துள்ளதுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையின்போது குழந்தையின் தொண்டையில் சிறிய போத்தல் மூடி சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. தெரிவிக்கப்படுகின்றது.
போத்தல் மூடி தொண்டையில் சிக்கியதால் மூளைக்கான இரத்த ஓட்டம் தடைபட்டதாலேயே இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் போது தெரிய வந்துள்ளது.
திவுலபிட்டி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.