Wednesday 28 October 2020

நாளை நள்ளிரவு முதல், மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு..!!!

SHARE


நாளைய தினம் நள்ளிரவு முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில், மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை காலை 5 மணிவரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இதனிடையே ஊரடங்கு அமுலில் உள்ள அனைத்து பகுதிகளிலும், நாளையத்தினம் காலை 8 மணிமுதல், இரவு 10 மணிவரையில் அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் கொள்வனவு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

SHARE