ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி இன்று (02) காலை இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகள் இன்று (02) அதிகாலை 4.30 மணி அளவில் சீனாவின் பீஜிங்கில் இருந்து விசேட விமானமொன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
அதேபோல், ஃபைசர் தடுப்பூசிகளின் ஒரு தொகுதி எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடையும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.