வெள்ளம் தாக்கிய பிரேசில் நகரத்தில் 191 பேர் மாயம்..!!!
பிரேசிலின் பெட்ரோபொலிஸ் நகரில் நான்கு நாட்களுக்கு முன் பெரும் அழிவை ஏற்படுத்திய நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் உயிர்தப்பியோரை தேடும் மீட்பு நடவடிக்கைகளுக்கு மோசமான காலநிலை இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
கடும் மழை காரணமாக அவசர மீட்புக் குழுவினர் கடந்த சனிக்கிழமை பல முறை தமது பணிகளை இடைநிறுத்தினர். உயிர் தப்பியோரை மீட்கும் எதிர்பார்ப்பு குறைந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தது 27 சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் உட்பட 146 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் 191 பேர் தொடர்ந்து காணாமல்போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
900க்கும் அதிகமானவர்கள் பாடசாலைகள் மற்றும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
அடர்ந்த பனிக்கு மத்தியில் பணியாளர்கள் இடிபாடுகள் மற்றும் சேற்று மண்ணை அகற்றி வருகின்றனர். தன்னார்வலர்கள் அந்த பணிகளுக்கு உதவி வருகின்றனர்.