எதிர்வரும் மூன்று மாதங்கள் தடையின்றி மின் விநியோகத்தை பேணுவதற்கு மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என மின் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
களனிதிஸ்ஸ மற்றும் சோஜிட்ஸ் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்வதற்கான வேலைத்திட்டத்தை எரிசக்தி அமைச்சும் மின்சார சபையும் வகுக்க வேண்டியது அவசியமானது என மின் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
நீர்மின்சாரத்துக்கான கணிசமான அளவு மழை இதுவரை பெய்யவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே, அடுத்த மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு இல்லாமல் வழங்க முடியும் என மின் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.