நடிப்பதை நிறுத்துகிறாரா நயன்தாரா?
நடிகை நயன்தாரா நடிப்பதை நிறுத்தி விட்டு திருமண வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பதை நிறுத்திவிட்டு, தன் நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தற்போது கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே உள்ளது.
தமிழில் 'ஐயா' படம் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நயன்தாரா. இதற்குப் பிறகு நடிகர் சிம்பு, பிரபுதேவா இவர்களுடன் காதல் உறவில் இருந்து, அது கை கூடாமல் போய் விட்டது. பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரவுடிதான்' படத்தில் இவர் நடித்தபோது இவருக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. இப்பொழுது 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற பெயரில் நிறைய படங்களை தயாரித்து வருகின்றனர். சொந்த தயாரிப்பிலேயே நயன்தாராவும் நடித்து வருகிறார்.
'ரவுடி பிக்சர்ஸ்' தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவரும் நடிக்கவுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கும் நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் லூசிபர் படத்தின் ரீமேக், இந்தியில் ஷாருக்கான் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதனால், தற்போது ஒப்பந்தமாகியிருக்கும் இந்த படங்களை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு விரைவில் திருமண வாழ்க்கைக்குள் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் நிலையில் இந்த ஜோடிகள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.
நடிப்பு தயாரிப்பு இதை தவிர்த்து நயன்தாரா சாய் பிசினஸ், லிப்பாம் கம்பெனி உள்ளிட்ட மற்ற வியாபாரங்களிலும் முதலீடு செய்துள்ளார். இதனால் தற்போது ஒப்பந்தமாகி உள்ள படங்களை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு திருமண வாழ்க்கைக்குள் அடுத்த வருட ஆரம்பத்தில் கண்டிப்பாக நுழைய வேண்டும் என இரு தரப்பு பெற்றோர்களும் விரும்புவதாகவும், இதனால் படங்களை முடித்துவிட்டு தயாரிப்பு மற்றும் பிசினஸ்ஸில் நயன்தாரா முழு கவனம் செலுத்த உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த ஜோடி இடமிருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.