இலங்கை வந்தடைந்த ரூ. 550 கோடி மருத்துவப் பொருட்கள்..!!!
இந்தோனேஷியாவினால் இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்பட்ட 550 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக குறித்த பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து குறித்த பொருட்களை சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.