யாழில் பரிசோதனை செய்த இருவருக்கு கொரோனா



யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திமூர்த்தி தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 48 பேருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - ஒருவர் .

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 6 பேர்.

* தனிமைப்படுத்தல் மையம் வெள்ளாம்குளம் - 4 பேர்.

* தனிமைப்படுத்தல் மையம் வவுனியா - 18 பேர் .
* பாதுகாப்பு படையினர் ஆதாரவைத்தியசாலை முல்லைத்தீவு - 6 பேர்.

* ஆதாரவைத்தியசாலை தெல்லிப்பளை - ஒருவர்.

* தனிமைப்படுத்தல் மையம் முல்லைத்தீவு - 11 பேர்.(இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது )

* சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு புதுக்குடியிருப்பு - ஒருவர்.

ஆகியோருக்கே பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் பரிசோதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');