Tuesday 28 July 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராயின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? தீயாய் பரவும் தகவல் ..!!!

SHARE



கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சிகிச்சைக்கு பின் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.

அபிஷேக் பச்சனின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் கடந்த 18 ஆம் தேதி அதிகாலை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால், இருவரும் அமிதாப் மற்றும் அபிஷேக் சிகிச்சை பெற்றுவந்த நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் குணமடைந்த செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யா மருத்துவமனையில் இருந்து கார் மூலம் வீடு திரும்பியுள்ளனர்.
SHARE