மேலும் 261 பேருக்கு கொரோனா; இன்று மட்டும் 541 பேருக்கு கொரோனா தொற்று..!!!
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 261 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்று. அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று மட்டும் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 541ஆக அதிகரித்துள்ளது.