Friday 23 October 2020

இலங்கையில் மேலும் 609 பேருக்கு கொரோனா..!!!

SHARE


நாட்டில் மேலும் 609 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை (ஒக்.22) கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார்.

அவர்களில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர் இடையே ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட 48 பேரும் அவர்களுடன் தொடர்புடைய 40 பேரும் பேருவளையைச் செர்ந்த 20 பேரும் காலி மீன்பிடித் துறை முகத்தில் 5 பேரும் என 609 பேர் இன்று கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 896ஆக அதிகரித்துள்ளது.

SHARE