Tuesday 27 October 2020

கொரோனாவுக்கு பலியான மூவரின் விபரம்; மீன் ரூபத்தில் வந்த எமன்?

SHARE


நாட்டில் இன்று உயிரிழந்த கொரோனா நோயாளர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

ஜா-எல, திசேரா மாவத்தையை சேர்ந்த 41 வயது பெண், கடந்த 24ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு கொழும்பு பேலியகொட மீன் சந்தையில் இருந்தே தொற்று பரவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் சைரோஸிஸினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு கொம்பனித்தெரு வேகந்த பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 87 வயது பெண்ணுக்கும் பேலியகொட மீன் சந்தையில் இருந்தே தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவருடைய மகள் பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன் கொள்வனவு செய்து வந்தது பின்னர் அறியப்பட்டுள்ளது.

அதேபோல கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய விஷேட தேவையுடைய இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது அவரது பீ.சி.ஆர் பரிசோதனையில் தெரியவந்தது.
SHARE