Tuesday 20 October 2020

லங்கா பிரீமியர் லீக்குக்கு யாழ். இளைஞர்கள் தெரிவு..!!!

SHARE


லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜெப்னா ஸ்ரலியன்ஸ் அணி சார்பில் விளையாடுவதற்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கேல் கிளாடியேட்டர்ஸ் அணி, காண்டி டூஸ்கர் அணி, தம்புல்லாஹாக் அணி, ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி, கொழும்பு கிங்ஸ் அணி ஆகிய 5 அணிகள் பங்கு பற்றுகின்றன.

இதில் திசாரா பெரோர தலைமையிலான ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் யாழ்ப்பாணம், சென்.ஜோன்ஸ் கல்லூரியை சேர்ந்த கபில் ராஜ், டினோசன் மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த வியஸ்காந் ஆகிய மூவருமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

SHARE