பயணத்தடையை நீக்குவதற்கான தீர்மானத்தில் மாற்றம்?
எதிர்வரும் திங்கட்கிழமை (02) பயணத்தடையை நீக்குவதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானமானது சில வேளைகளில் மாற்றமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இதனைக் கூறியுள்ளார்.
பயணத்தடையை நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்தின்போது இருந்த நாட்டின் நிலவரமும், தற்போதைய நிலவரமும் முரண்பாட்டு நிலைமையில் இருப்பதன் காரணமாக குறித்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.