2ஆம் திகதி முதல் ஆசிரியர்கள் பணிக்கு செல்ல வேண்டுமா?
எதிர்வரும் 2ஆம் திகதி முதல் அரச சேவை ஊழியர்களை வழமை போன்று பணிக்கு அழைப்பதற்கான சுற்று நிரூபம் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது ஆசிரியர்களுக்கு செல்லுபடியாகாது என கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச சேவை நாளை மறுதினம் (02) முதல் வழமைக்கு திரும்புகின்ற போதிலும், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பாத காரணத்தினால் ஆசிரியர்களை சேவைக்கு அழைக்காதிருக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
பாடசாலைகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பை, கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட பின்னரே, ஆசிரியர்களுக்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.