Tuesday 7 September 2021

நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவ ‘வள்ளி காந்தர்வ விவாகம்’..!!! (Video)

SHARE

தினைப் புனத்தில் காவல் நின்ற நம்பிராஜன் மகளான வள்ளிக் குறத்தியை ஆட்கொண்டு அருள் செய்த ஐதீகத்தைப் பாவனை செய்யும் வகையில் நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தின் 26 ஆம் நாள் இடம்பெற்ற வள்ளியம்மாள் காந்தர்வக் கல்யாணக் காட்சிகள்.

தினைப் புனத்தில், காவல் காத்துக் கொண்டிருந்த வள்ளியை வேடனாகவும், வேங்கை மரமாகவும், விருத்தனாகவும் வேடமிட்டு, லீலைகள் பல செய்து, அவளை மணம் புரிய விரும்பி, காதல் மொழிகளைப் பேசிய குமரன், வயோதிக உருவில் இருந்த அவரை இன்னார் என்று தெரியாமல் வள்ளி மிரண்டு விலக, அவளை மணக்க அண்ணனாகிய விநாயகரைத் துணைக்கு அழைத்தார். அவர் யானை வடிவில் வந்து, வள்ளியைத் துரத்தினார். யானையைக் கண்டு அஞ்சி, வயோதிகராக வந்த முருகனை அணைத்துக்கொண்டாள் வள்ளி என்பது ஐதீகம். 











SHARE