Tuesday 7 December 2021

திருகோணமலையில் ஆடைத் தொழிற்சாலை பஸ் விபத்து ; 26 பேர் காயம்..!!!

SHARE

திருகோணமலையில் ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (07) காலை இடம் பெற்றுள்ளது. கோமரங்கடவெல பகுதியில் இருந்து கப்பல் துறை பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் போது பஸ் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது.

பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் துறை சுதந்திர வர்த்தக வலயத்துக்கு அருகாமையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
SHARE