Sunday 20 February 2022

நாளை ஒரு மணிநேர சுழற்சிமுறை மின்வெட்டு..!!!

SHARE

தென் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நாளை (21) காலை 08.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை ஒரு மணித்தியால மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தென் மாகாணத்தில் மாத்திரம் காலை 08.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை 3 மணித்தியால மின்வெட்டு ஏற்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தென் மாகாணத்தில் நாளை (21) ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பிற்பகல் அறிவித்தது.


தென் மாகாணத்திற்கு மின்சாரம் வழங்கும் பல நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு வேகமாக வீழ்ச்சியடைந்தமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டது.
SHARE