Sunday 18 September 2022

தேசிய சாதனை படைத்துள்ள யாழ்ப்பாணத்தின் வீரர்..!!!

SHARE


அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு நடாத்தப்படுகிற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளின், கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.15M உயரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு 5.11 மீட்டர் உயரத்தைத் தாவிய இலங்கை விமானப்படை வீரர் இஷார சந்தருவன் நிலைநாட்டிய ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் தேசிய சாதனையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்துள்ளார்.

கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் அண்மைக்காலமாக தேசிய ரீதியில் பல வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்து வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான அருந்தவராசா புவிதரன், எதிர்காலத்தில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து சர்வதேச போட்டிகளில் சாதிக்க வாழ்த்துகிறேன்.



SHARE