Saturday 24 October 2020

நாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!

SHARE


நாட்டில் மேலும் 201 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று சனிக்கிழமை(22) கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார்.

அவர்களில் 37 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் 24 பேர் மீன்பிடித் துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும்140 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்களுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்மூலம் மினுவாங்கொட கோரோனா வைரஸ் பரவல் கொத்தணியை அடுத்து 3 ஆயிரத்து 883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 7 ஆயிரத்து 354 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE