மருதானை, தெமட்டகொடவில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு..!!!
கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பயகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.