Sunday 18 October 2020

தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத் திறப்பு விழா..!!!

SHARE


தமிழ் மக்கள் கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் தலைவருமாகிய சி. வி. விக்னேஸ்வரன் நாடா வெட்டித் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளான சுரேஷ் பிரேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் உட்பட கட்சிப் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 படங்கள் – ஐ.சிவசாந்தன் 
















SHARE