அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கணவனும் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் திருக்கோவில் விநாயகபுரத்தில் இடம்பெற்றது.
விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த லோகநாயகம் யோகேஸ்வரன் (வயது -46) அவரது மனைவி ஜெயசுதா (வயது-46) ஆகிய இருவருமே மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.
தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் கச்சான் செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியுள்ளது.
சடலங்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.