Wednesday 28 October 2020

யாழ்ப்பாணம் வடமராட்சியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!

SHARE


பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்த நிலையில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட மூவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் மினுவாங்கொட – பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியையடுத்து யாழ்ப்பாணத்தில் 9 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விடத்தல்பளையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேருக்கான பிசிஆர் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 40 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
SHARE