‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’ – யாழ்.பல்கலை வளாகத்தில் அத்திபாரம் வெட்டும் பணி முன்னெடுப்பு..!!!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான அத்திபாரம் வெட்டும் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு இந்தப் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் இன்று ஆரம்பமானது.
இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபியை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.