Sunday 20 February 2022

யாழில் 5 மாதக் குழந்தையுடன் கணவன் தலைமறைவு - மனைவி முறைப்பாடு..!!!

SHARE

நீதிமன்றத்தின் இடைக்கால கட்டளைக்கு அமைவாக 5 மாதக் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்காமல் கணவன் தலைமறைவாகிவிட்டாரென மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

கணவன் மனைவி முரண்பாடு காரணமாக , 5 மாதக் குழந்தையை கணவன் தன்னுடன் கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பில் மனைவி இளவாலைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மல்லாகம் நீதிமன்றுக்கு விடயம் பாரப்படுத்தப்பட்டது . நீதிமன்றில் குழந்தையின்றி முன்னிலையான கணவனிடம், தாய்ப்பால் குடிக்கும் குழந்தை என்பதால் மனைவியிடம் குழந்தையை ஒப்படைக்குமாறு இடைக்காலக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதன் பின்னரே கணவன், குழந்தையுடன் தலைமறைவாகிவிட்டாரெனத் தெரிவித்து மனைவியால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .
SHARE